அஜித் செய்த தரமான சம்பவம்!

அஜித் செய்த தரமான சம்பவம்!
  • PublishedJuly 11, 2023

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் தொடக்க நிலையிலேயே இருக்கிறது. இந்நிலையில், தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் அஜித்  இயக்குனர் பிரசாந்த் நீலிற்கு அழைப்பு விடுத்ததுள்ளார். அப்பொழுது இவர்கள் இருவரும் சந்தித்த நிலையில் அஜித் அவரிடம் நேரடியாகவே நாம் படம் பண்ணலாமா என்று கேட்டிருக்கிறார்.

இதை கேட்ட இயக்குனருக்கு தலைகால் புரியாமல் ரொம்பவே பதட்டத்துடன் நீங்கள் இப்படி கூப்பிடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் உங்களுடைய தீவிர ரசிகன் என்று சொல்லி இருக்கிறார்.

அதன் பின் நீண்ட உரையாடலுக்கு அடுத்து தற்போது சலார் படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறேன். அதற்கு அடுத்து வேறு யாரிடமும் அட்வான்ஸ் வாங்காமல் உங்களிடம் நான் வருகிறேன்.

அப்பொழுது நீங்கள் ஓகே சொன்னால் கண்டிப்பாக நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என்ற வாக்குறுதியை கொடுத்து இருக்கிறார். இதனால் கண்டிப்பாக ஒரு வருடம் அல்லது இரண்டு வருடத்திற்குள் இவர்கள் கூட்டணி தொடங்குவது உறுதியாகிவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *