பல வருடங்களுக்குப் பிறகு இமயமலை சென்றார் ரஜினி… அதிர்ச்சி செய்தியையும் விட்டுச் சென்றார்

பல வருடங்களுக்குப் பிறகு இமயமலை சென்றார் ரஜினி… அதிர்ச்சி செய்தியையும் விட்டுச் சென்றார்
  • PublishedAugust 9, 2023

ரஜினி எப்போதுமே இமயமலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருப்பார். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 4 வருடமாக இமயமலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்தவுடன் மாலைதீவுக்கு சென்று வந்திருந்தார். மேலும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியிலும் ரஜினி செம மாஸாக பேசினார்.

இந்நிலையில் ஜெயிலர் படத்தை முழுவதுமாக சூப்பர் ஸ்டார் பார்த்து விட்டாராம். இதனால் உடனடியாக 4 வருடங்களுக்குப் பிறகு இமயமலைக்கு ரஜினி புறப்பட்டிருக்கிறார்.

ரஜினியை பொறுத்தவரையில் தான் நடிக்கும் போதே இந்த படம் வெற்றி பெறுமா என்பதை கணித்து விடுவாராம். இதை பல மேடைகளில் அவரே சொல்லி நாம் கேட்டிருக்கிறோம்.

ஆனால் இப்போது ஜெயிலர் படம் பற்றி கேட்கும் போது, நீங்கள் தான் படத்தை பார்த்துவிட்டு சொல்ல வேண்டும் என்ற அதிர்ச்சி ரிப்போர்ட் கொடுத்து இருக்கிறார்.

மேலும் ஜெயிலர் படத்தை பற்றி நான் சொன்னால் நன்றாக இருக்காது என்று ரஜினி கூறியிருக்கிறார். இவர் இவ்வாறு சொன்னது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

v

ஒருவேளை நெல்சன் ரஜினியை ஜெயிலர் படத்தின் மூலம் திருப்திபடுத்த வில்லையோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் நாளை படம் வெளியாக உள்ள நிலையில் திடீரென ரஜினி இமயமலைக்கு கிளம்பியது இன்னும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்சனுக்கு இந்த படம் வெற்றி அடைந்தால் தான் அடுத்த படம் கிடைக்கும் என்று உள்ள நிலையில், ரஜினியும் தொடர் தோல்வி படங்களை கொடுத்து வந்த நிலையில் ஜெயிலர் படத்தின் மூலம் வெற்றி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *