அடித்து தூள் கிளப்பிய “ரோலெக்ஸ்”… சூர்யாவின் நடிப்பில் தனிப் படமாகிறது

அடித்து தூள் கிளப்பிய “ரோலெக்ஸ்”… சூர்யாவின் நடிப்பில் தனிப் படமாகிறது
  • PublishedAugust 13, 2023

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் ரசிகர்களுடன் சந்திப்பை மேற்கொண்ட நடிகர் சூர்யா, தனது அடுத்தடுத்த 5 படங்களின் அப்டேட்டுக்களை கொடுத்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. வரலாற்று கதையம்சம் கொண்ட பேண்டஸி திரைப்படமாக தயாராகி வருகிறது. இப்படம் குறித்து பேசுகையில், தாங்கள் ஷூட்டிங்கிற்கு முன் எதிர்பார்த்ததை விட 100 மடங்கு சிறப்பாக வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

தனது 43-வது படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் என சூர்யா கூறி இருக்கிறார். தற்காலிகமாக சூர்யா 43 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தான் தயாரிக்க உள்ளது.

சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கும் ஒரு படம் என்றால் அது வாடிவாசல் தான். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆனபோதிலும் இன்னும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பேசிய சூர்யா, வெற்றிமாறன் விடுதலை 2-ம் பாகத்தின் ஷுட்டிங்கை முடித்த பின்னர் வாடிவாசல் தொடங்கும் என கூறி உள்ளார்.

விக்ரம் படத்தில் சூர்யா நடித்த ரோலெக்ஸ் என்கிற கேமியோ கதாபாத்திரம் பெரியளவில் வரவேற்பை பெற்றது. அந்த கதாபாத்திரத்தை வைத்து தனி படம் எடுக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதுகுறித்த அப்டேட்டையும் சூர்யா கொடுத்துள்ளார்.

அதன்படி ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து தனி படம் ஒன்று உருவாக உள்ளதாகவும், இதற்காக லோகேஷ் சொன்ன கதை தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறி இருக்கிறார்.

ரோலேக்ஸ் படத்தை எடுத்து முடித்த பின்னர் இரும்புக்கை மாயாவி படத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் ரசிகர்கள் சந்திப்பில் சூர்யா கூறி இருக்கிறார். இப்படி தான் நடிக்க உள்ள அடுத்த 5 பட அப்டேட்டுகளை நடிகர் சூர்யா ஒரே நேரத்தில் கூறியதைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *