தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் பணிபுரிந்த பெண் எடுத்த விபரீத முடிவு

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டில் பணிபுரிந்த பெண் எடுத்த விபரீத முடிவு
  • PublishedApril 25, 2024

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் வீட்டில் பணிபுரிந்து வந்த வேலைக்கார பெண் திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் தொடர்ந்து தரமான படங்களை தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவன தலைவர், தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து, சிங்கம், நான் மஹான் அல்ல, பிரியாணி, பத்து தல போன்ற 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.

இவரின் வீடு தி.நகரில் உள்ள நிலையில் அங்கு மனைவி நேகா மற்றும் தன்னுடைய பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் பணிபுரிந்து வந்த வேலைக்கார பெண், திடீர் என தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவரின் தற்கொலை முயற்சிக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *