நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்

நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்
  • PublishedNovember 2, 2023

மூத்த நடிகரான ஜூனியர் பாலையா இன்று காலை தனது இல்லத்தில் உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகராக இருந்த பாலையாவின் மூன்றாவது மகன் ஜூனியர் பாலையா. தனது தந்தை போலவே உருவ அமைப்பு கொண்ட அவர் 1975ஆம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

பாலையா எப்படி தனது தனித்துவமான உடல்மொழி, குரல் மொழி ஆகியவற்றை கொண்டிருந்தாரோ அதேபோல் ஜூனியர் பாலையாவும் கொண்டிருந்தார்.

ஜூனியர் பாலையா நடித்த படங்களில் கரகாட்டக்காரன் திரைப்படம் அவருக்கான தனி அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அதிலும் கவுண்டமணி, செந்தில் வாழைப்பழ காமெடியில் ஜூனியர் பாலையா சொல்லும், ‘அண்ணே என்னதான் இருந்தாலும் அவன் நம்ம செட்டு’ என்ற வசனமும், செந்திலிடம் வாழைப்பழம் குறித்து விசாரிப்பதற்கு முன்பு அவர் செய்த உடல்மொழியும் பலரையும் கவர்ந்தது.

அவருக்கு இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 70.

.ஜூனியர் பாலையாவின் உயிரிழப்புக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அவரது உடல் நாளை தகனம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *