வீட்டில் அப்பா இப்படித்தான்….. உண்மையை போட்டு உடைத்த அதிதி ஷங்கர்

வீட்டில் அப்பா இப்படித்தான்….. உண்மையை போட்டு உடைத்த அதிதி ஷங்கர்
  • PublishedJuly 18, 2023

நடிகை அதிதி ஷங்கர் கடந்த ஆண்டு வெளியான விருமன் படத்தின்மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்தப் படம் ரிலீசாகியுள்ளது. சமூக வலைதளங்களிலும் அதிதி ஷங்கர் மிகுந்த ஆக்டிவாக காணப்படுகிறார். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

நடிகை அதிதி ஷங்கர் கார்த்தியுடன் நடித்த விருமன் படத்தில் கிராமத்து பெண் கேரக்டரில் மிகவும் பொறுப்பான பெண்ணாக நடித்திருந்தார்.

மாவீரன் படத்தில் பத்திரிகையாளராக இயல்பான கேரக்டரை வெளிப்படுத்தியிருந்தார். இந்த இரண்டு கேரக்டர்களுக்கும் சற்றும் பொருந்தாத சுபாவம் தன்னுடையது என்று தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் அதிதி.

தனக்கு கிடைத்த வாய்ப்புகள் தன்னுடைய தந்தை மூலமாக வரவில்லை என்றும் தான் கதை கேட்டுவிட்டு அப்பாவிடம் சொல்வேன், அவர் அனுமதியுடன்தான் படத்தை தீர்மானிக்கிறேன் என்றும் அதிதி கூறியுள்ளார்.

தன்னுடைய கேரியரை சிறப்பாக தன்னுடைய அப்பா மற்றும் அம்மா முழு ஒத்துழைப்பை தந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு அடுத்ததாக தன்னுடைய அப்பா ஷங்கர் இயக்கத்திலும் திருச்சிற்றம்பலம் இயக்குநர் மித்ரன் இயக்கத்திலும் லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும் நடிக்க விருப்பம் உள்ளதாகவும் அதிதி தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடைய அப்பாவை போல இயக்குநர் ஆகும் கனவெல்லாம் தனக்கு இல்லை என்றும் அதிதி கூறியுள்ளார். விருமன் படத்தின் ரிலீசை தொடர்ந்தே தான் சமூக வலைதளப்பக்கத்தில் இணைந்ததாகவும் விருமன் படத்தின் ரிலீஸ் குறித்த போஸ்ட்டே தனது முதல் பதிவு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வீட்டிற்கு தெரியாமல் சில நேரம் இவற்றை பயன்படுத்தியுள்ளதாக அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு தன்னுடைய வீட்டில் ஸ்ட்ரிக்ட்டாக இருந்ததாகவும் தான் தன்னுடைய படிப்பில் கவனமாக இருக்கவே அப்பா இந்தளவிற்கு கண்டிப்பாக இருந்ததாகவும் அதிதி குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் அடுத்தப்படத்திலும் இணைய வாய்ப்புள்ளதாகவும் அதிதி தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். படத்தின்போது, வாழ்க்கையில் தான் கடந்துவந்த பாதை குறித்து சிவகார்த்திகேயன் தன்னிடம் பேசியதாகவும் தானும் பெரிதாக வளர வேண்டும் என்று கூறியதாகவும் அதிதி தெரிவித்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனிடம் அதிகமாக கற்றுக் கொண்டதாகவும் அதிதி குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *