டேட்டிங் ஆப் குறித்து தகவலை பகிர்ந்தார் நடிகை பார்வதி

டேட்டிங் ஆப் குறித்து  தகவலை பகிர்ந்தார் நடிகை பார்வதி
  • PublishedFebruary 8, 2025

பார்வதி திருவோத்து பூ , மரியான், உத்தமவில்லன், பெங்களூர் டேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் பார்வதி திருவோத்து. இவர் மலையாள சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.

பார்வதி அவ்வப்போது பேட்டிகளில் ஓப்பனாக பேசும் பல விஷயங்கள் பெரிய சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறது.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை பார்வதி அவருக்கு காதலில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் டேட்டிங் ஆப் பயன்படுத்துவது குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், ” நான் டேட்டிங் ஆப்பில் அக்கவுன்ட் வைத்துள்ளேன். அவ்வப்போது அதில் நல்ல பசங்கள் உள்ளார்களா என்று பார்ப்பேன். ஆனால், எனக்கு நேரில் பார்த்து பழகி வரும் காதல் மீது தான் நம்பிக்கை.

நான் முன்பு ஒருவரை காதலித்தேன். காதலில் எனக்கு இருக்கும் மிக பெரிய பிரச்சனை என் முன் கோபம் தான். அதன் காரணமாக அந்த காதல் உடைந்து விட்டது. அதனால் இனிமே காதலிக்கும் முன் பலமுறை யோசித்து காதலில் விழ முடிவெடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *