பல வருடங்களாக அதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார்…அஜித்

ஒரு படம் வெளிவருவதற்கு முன்பே அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க படம் சம்பந்தப்பட்டவர்கள் என்னென்னமோ செய்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான ‘வீர தீர சூரன் 2’ படத்திற்காக அதன் நாயகன் விக்ரம், நாயகி துஷாரா உள்ளிட்டோர் கல்லூரி விழா, தமிழகத்தில் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா, கேரளா என பல ஊர்களுக்கும் சென்றார்கள். படம் வெளியான பின்பும் கூட பல தியேட்டர்களுக்குச் சென்று படத்தைத் தாங்கிப் பிடித்தார்கள்.
ஆனால், அஜித் படம் வந்தால் அவை எதுவுமே நடக்காது. தான் நடிக்கும் படங்களின் எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும் அஜித் கலந்து கொள்ள மாட்டார்.
பல வருடங்களாக அதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார். இந்தக் காலத்தில் அந்த கொள்கை எடுபடுமா என்பது சந்தேகமே. அது அஜித் நடித்து வெளிவந்த ‘விடாமுயற்சி’ படத்திலேயே தெரிந்தது.
இந்நிலையில் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள ‘குட் பேட் அக்லி’ படத்திற்காக இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியும், பத்திரிகையாளர் சந்திப்பும் நடக்கவில்லை. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தியிலும் இதே நிலைதான்.
தமிழிலாவது சில தினங்களுக்கு முன்பு டிரைலரை வெளியிட்டார்கள். தெலுங்கு, ஹிந்தி டிரைலர்களை இன்றுதான் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளார்கள்.
தமிழில் தியேட்டர்கள் கிடைக்கும் அளவிற்கு தெலுங்கு, ஹிந்தியில் கிடைக்குமா என்பது தெரியவில்லை, என்பதுதான் இப்போதைய கள நி0லவரம்.