ஷாருக்கான் பற்றி பேசிய அனன்யா பாண்டே

ஷாருக்கான் பற்றி பேசிய அனன்யா பாண்டே
  • PublishedJune 7, 2025

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அனன்யா பாண்டே. இவர் கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த Student of the Year 2 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

பின் Khaali Peeli, Gehraiyaan, லைகர், CTRL போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். ரசிகர்களின் மனம் கவர்ந்த பாலிவுட் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் அனன்யா பாண்டே சமீபத்திய பேட்டி ஒன்றில், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் குறித்து பேசியுள்ளார்.

இதில் “ஷாருக்கான் எனக்கு 2வது தந்தை மாதிரி. அவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை சிறப்பாக கையாளுவார். ஆர்யாம் சஹானா மற்றும் அப்ராம் ஆகியோருக்கு அவர் எவ்வளவு அற்புதமான தந்தை என்பதை, நான் எனது சிறு வயதில் இருக்கும்போது நேரில் பார்த்திருக்கிறேன்.

அவரைப்போல் யாரும் இல்லை. அவர் உங்களுடன் பேசும்போது, இந்த உலகில் உள்ள ஒரே நபர் நீங்கள்தான் என்பது போல் உணர வைத்துவிடுவார். அவர் என்னுடைய சிறந்த தோழியின் தந்தை” என கூறியுள்ளார். நடிகை அனன்யா பாண்டேவின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *