மாமனார் பேச்சை கேட்காத ஜோதிகா… என்ன தெரியுமா?

மாமனார் பேச்சை கேட்காத ஜோதிகா… என்ன தெரியுமா?
  • PublishedJuly 14, 2025

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக திகழ்ந்து வரும்ய சூர்யா – ஜோதிகா தம்பதியினர் சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்று வெகேஷனை ஜாலியாக கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தனர்.

ஏற்கனவே மாமனார் சிவக்குமாருடன் ஏற்பட்ட பிரச்சனையால் மும்பைக்கு சூர்யா மற்றும் இரு குழந்தைகலுடன் குடியேடிவிட்டதாக தகவல் வெளியானது. அதற்கு ஜோதிகா, அம்மாவிற்காகவும் பிள்ளைகளின் படிப்பு, ஷூட்டிங் போன்ற காரணங்கள் தான் அங்கு சென்றதாகவும் வேறு எந்த காரணமும் இல்லை என்று கூறியிருந்தார் ஜோதிகா.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்த பேட்டியொன்றில் ஜோதிகா – சூர்யா விஷயம் பற்றி சில தகவலை பகிர்ந்துள்ளார். அதில், சென்னை தி நகரில் சூர்யா – ஜோதிகா உள்ளிட்டோர் இணைந்து பிரமாண்டமாக ஒரு பங்களாவை கட்டினார்கள்.

அதில் அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் சூர்யாவும் ஜோதிகாவும் மும்பைக்கு சென்று செட்டிலாகியிருக்கிறார்கள். ஜோதிகா சென்னைக்கு வரும்போது தி நகர் வீட்டில் தங்காமல், ஈசிஆரில் அவர்கள் வீடு கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அங்கு ஒரு பார்ட்டி நிகழ்ச்சியும் நடித்தியிருக்கிறார்கள். பார்ட்டிக்கு சிவக்குமார் உள்ளிட்டவர்களும் சென்றார்கள். பொதுவாக சிவக்குமார் நிறைய நெறிகளை கடைப்பிடிப்பவர். அதுமட்டுமில்லாமல் மாமனார் சொல்லும் அட்வைஸ்களை எந்த மருமகளும் கேட்பதில்லை என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *