60 இலட்சம் பெறுமதியான வீட்டை தட்டிச் சென்ற அருணா!

60 இலட்சம் பெறுமதியான வீட்டை தட்டிச் சென்ற அருணா!
  • PublishedJune 26, 2023

என்டர்டைன்மென்ட் ஷோ என்றாலே அது விஜய் டீவி நிகழ்ச்சியாகத்தான் இருக்கும். அவர்களுக்கு என தனி ஸ்டைலும், அந்த நிகழ்ச்சிகளை மெருகூட்டி வருகிறது.

இந்நிலையில், மக்கள் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இருந்து வருகிறது. 8 சீசன்கள் நிறைவடைந்த நிலையில், தற்போது ஒன்பதாவது சீசனின் கிராண்ட் பினாலே நேற்று நடைபெற்றது.

இதில் இறுதிச்சுற்றில் அபிஜித்,  அருணா,  பூஜா,  பிரியா,  பிரசன்னா ஆகிய ஐந்து பேர் நேருக்கு நேராக போட்டியிட்டனர். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் முதலாக சூப்பர் சிங்கர் டைட்டிலை ஒரு பெண் தட்டி தூக்கினார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இறுதிப் போட்டியில் பல சுற்றுகள் நடைபெற்றது. இதில் பலரும் அபிஜித் தான் வின்னர் ஆவார் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று அதிரடி திருப்பமாக மக்கள் வாக்குகளின் அடிப்படையிலும் நடுவர்களின் மதிப்பெண்களை வைத்து போட்டியாளர் அருணா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்

இவர்களை தொடர்ந்து இரண்டாவது இடத்தை பிரியாவும், மூன்றாவது இடத்தை பிரசன்னாவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு பணப்பரிசு வழங்கப்பட்டதுடன், முதல் பரிசை வென்ற அருணா 60 இலட்சம் மதிப்புடைய வீட்டை வென்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *