மணிரத்தினமே கேட்டும் நோ சொல்லிய அரவிந்த் சாமி!

மணிரத்தினமே கேட்டும் நோ சொல்லிய அரவிந்த் சாமி!
  • PublishedJuly 9, 2023

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் அரவிந்த்சாமி.  அதன் பிறகு தளபதி படத்தில் நடித்திருந்தார். பெண்களின் மனதை கொள்ளையடித்த இவர் இப்போது ஹாண்ட்சம் வில்லனாக கலக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அரவிந்த்சாமியின் மகனை தனது படத்தில் நடிக்க வைக்க மணிரத்தினம் ஆசைக் கொண்டாராம். இதை அரவிந்சாமியிடமே கூறியும் இருக்கிறார். ஆனால் அதற்கு அரவிந்த் சாமி நோ சொல்லிவிட்டாராம்.

அரவிந்த் சாமியின் மகன், மகள் என்ன படிப்பு படித்திருக்கிறார்கள் தெரியுமா?  லேட்டஸ்ட் புகைப்படம் - தமிழ் News - IndiaGlitz.com

தனது மகனை பிசினஸ் மேக்னட் ஆக்க வேண்டும் என்று ஆசையில்இருக்கும் அரவிந்த் சாம் சினிமாவுக்கு வந்தால் நிறைய பணம் கிடைக்கும் என்றாலும் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டாராம்.

ஆனால் அவரது மகனுக்கோ மாடலிங் மீது மோகத்தில் இருக்கிறார். இப்போது அரவிந்த்சாமி மகனை எப்படியாவது ஹீரோ ஆக்கிவிட வேண்டும் என மணிரத்தினம் ஆசைப்பட்டு உள்ளார்.

தனது மகன் சொந்தமாக தொழில்தான் தொடங்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார். தான் சினிமாவில் நடிகனாக இருந்தாலும் தனது மகனை இந்த துறைக்கு அனுப்ப மனமில்லாமல் இருக்கிறார் அரவிந்த்சாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *