ஜப்பான் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கிய நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஜப்பான் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கிய நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்
  • PublishedJanuary 2, 2024

நேற்று ஜனவரி 1, 2024ம் வருடத்தை உலக மக்கள் அனைவரும் மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள்.  ஆனால் ஜப்பானில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே பதுவருடத்தை கொண்டாடி இருந்தார்கள்.

குறித்த நிலநடுக்கத்தால் 6க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக நேற்று தகவல் வர தற்போது உயிரிழப்பு செய்தி அதிகம் வருகிறது. இந்த தகவல் மக்கள் அனைவருக்குமே கொஞ்சம் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பல பிரபலங்கள் தங்கள் விடுமுறையையும், புது லருடத்தையும் கொண்டாட வெளிநாடு செல்வது வழக்கம். அப்படி தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜுனியர் என்.டி.ஆர் தனது குடும்பத்துடன் ஜப்பான் சென்றுள்ளார்.

அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டபோது அதனை உணர்ந்த என்.டி.ஆர் தனது டுவிட்டரில் பதிவு போட்டுள்ளார்.

அதில் அவர், ஜப்பானில் இருந்து இன்று வீடு திரும்பினேன். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன்.

கடந்த வாரம் முழுவதும் அங்கேயே இருந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் அதிலிருந்து மீண்டு குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். வலிமையாக இருங்கள், ஜப்பான்” என்று பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *