அந்த இடத்தில் பால் ஊற்றும் காட்சி; இயக்குநர் செய்த அட்டகாசம்..

அந்த இடத்தில் பால் ஊற்றும் காட்சி; இயக்குநர் செய்த அட்டகாசம்..
  • PublishedMarch 4, 2024

நடிகை கேத்ரின் தெரசா மெட்ராஸ் திரைப்படத்தில் நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா? என்னும் வசனத்தை பேசி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். இதைத்தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மெட்ராஸ் திரைப்படத்திற்குப் பிறகு பட வாய்ப்பு அதிகரிக்கும் என எதிர்பார்த்த இவருக்கு, தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்.

கலகலப்பு 2 திரைப்படத்திலும் அதீத கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். இவருக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் அதிகம் என்பதால், தெலுங்கில் எப்போதும், கவர்ச்சியை அள்ளி வீசி கொண்டிருக்கிறார். இதுமட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை கேத்ரின் குறித்து பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், நடிகை கேத்ரின் தெரசா, அண்மையில் ஒரு பேட்டியில், இயக்குநர் ஒருவர் என் வயிற்றில் தேன் ஊற்றி மலர்களை கொட்டுவது போல காட்சி எடுப்பதாக சொல்லி இருந்தார். எனக்கு அந்த காட்சி ஆபாசமாக இருந்தது. இதனால், அந்த காட்சியில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டேன் என்று கேத்ரின் அந்த பேட்டியில் கூறி இருந்தார்.

யார் இந்த இயக்குநர் என்று விசாரித்த போது தான் ஆர்யா நடித்த கடம்பன் படத்தில் இயக்குநர் ராகவன் இந்த காட்சியை எடுத்து இருக்கிறார். அந்த படத்தில் அந்த காட்சி இடம் பெற்று இருக்கிறது. ஆனால், அந்த காட்சியில் நடிக்க மறுத்துவிட்டேன் என்று கேத்ரின் தெரசா அந்த பேட்டியில் பொய் சொல்லி இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *