“இட்லி கடை” அடுத்த சம்பவத்திற்கு தயாரானார் தனுஷ்..

“இட்லி கடை” அடுத்த சம்பவத்திற்கு தயாரானார் தனுஷ்..
  • PublishedSeptember 19, 2024

நடிப்பு, பாடகர் என்பதை தாண்டி இப்போது இயக்கத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார் தனுஷ். அந்த வகையில் சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் ராயன் படம் வெளியானது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்போது தனுஷ் மீண்டும் தன்னுடைய இயக்கத்தில் ஒரு படத்தை நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு இட்லி கடை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இட்லி கடை படத்தை டாவன் பிக்சர்ஸ், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதில் அசோக் செல்வன் முக்கியமான கதாபாத்திரத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். மேலும் நித்யா மேனன், சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியாரும் நடிக்கிறார்கள்.

கண்டிப்பாக ராயன் அடுத்த சம்பவத்திற்கு தயாராகிறார் என்பது இட்லி கடை போஸ்டர் மூலம் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *