BREAKING – தனுஷ் இனி படம் நடிக்க முடியாதா? தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

BREAKING – தனுஷ் இனி படம் நடிக்க முடியாதா? தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி
  • PublishedJuly 29, 2024

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கடந்த சில வாரங்களாக பல அதிரடி முடிவுகளை அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் தனுஷுக்கு எதிராக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றனர்.

பல தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு நடித்து கொடுக்காததால் இனி தனுஷை வைத்து படம் எடுப்பவர்கள் தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசித்துவிட்டு தொடங்கவும் என தெரிவித்து இருக்கின்றனர்.

“மேலும் ஒரு படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பிறகு தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.”

“அதுமட்டுமின்றி பல படங்கள் ரிலீசுக்கு தியேட்டர் கிடைக்காமல் முடங்கி இருக்கின்றன. இந்த நிலையை மாற்ற புது விதிகள் வகுக்கப்பட இருக்கிறது. அந்த விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு புது ஷூட்டிங் தொடங்கலாம் என்பதால் 16.8.2024 பிறகு புது படங்கள் எதுவும் தொடங்க கூடாது.”

“நடிகர்கள் சம்பளம், தொழில்நுட்ப கலைஞர்கள் சம்பளம் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. அதை முறைப்படுத்த வேண்டி இருக்கிறது. தமிழ் சினிமா துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டி இருப்பதால் 01.11.2024 தேதி முதல் அனைத்து விதமான ஷூட்டிங்கும் நிறுத்தப்படுகிறது” என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *