ஜோதிகா மகளைத் தொடர்ந்து தனுஷ் மகன் யாத்ரா குறித்து வெளியான செய்தி

ஜோதிகா மகளைத் தொடர்ந்து தனுஷ் மகன் யாத்ரா குறித்து வெளியான செய்தி
  • PublishedMay 7, 2024

நடிகர் தனுஷின் மகன் யாத்ரா 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்தார். இந்த முடிவுகள் திங்கட் கிழமையான நேற்று வெளியானது. இதில் யாத்ரா நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக இணையத்தில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தன்னைவிட இரண்டு வயது குறைந்தவரான தனுஷை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

மகன்களுக்காக இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அண்மையில் இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடி உள்ளனர்.

அப்பா, அம்மாவின் விவகாரத்து ஒருபுறம் சென்று கொண்டு இருக்க, தனுஷின் மூத்த மகன் யாத்ரா பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதில் மொழிப்பாடத்தில் 100க்கு 98 மதிப்பெண்ணும், ஆங்கிலத்தில் 92, கணக்கு 99, பிசிக்ஸ் 91, கேமிஸ்ட்ரி 92, பயாலஜியில் 97 மதிப்பெண் பெற்று 600க்கு 569 மதிப்பெண் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாததால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

இதே போல் சூர்யா – ஜோதிகாவின் மகளும் நடைபெற்று முடிந்த 12ஆம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *