வயிறு வலிப்பதாக கூறிய அஞ்சலி.. ஒரே ரூமில் தங்கிய ஜெய்.. நாள் முழுதும் வரலயாம்…

வயிறு வலிப்பதாக கூறிய அஞ்சலி.. ஒரே ரூமில் தங்கிய ஜெய்.. நாள் முழுதும் வரலயாம்…
  • PublishedAugust 1, 2023

தமிழ் சினிமாவில் இயக்குனர் ராம் இயக்கத்தில் 2007ல் வெளியான கற்றது தமிழ் படத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அஞ்சலி.

இப்படத்தினை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டுநடித்து பிரபலமானார்.

சினிமாவில் நடிக்கும் நடிகைகள் சக நடிகர்களுடன் காதல் கிசுகிசுக்களில் சிக்குவது வழக்கமான ஒன்று.

அப்படி நடிகை அஞ்சலியும் சிலருடன் காதலில் கிசுகிசுவில் சிக்கி வந்துள்ளார். இடையில் எங்கேயும் எப்போதும், பலூன் உள்ளிட்ட படங்களில் ஜெய் உடன் ஜோடியாக நடித்திருந்தனர்.

அப்போது இருவருக்கும் ரகசிய காதல் இருப்பதாகவும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் தான் அஞ்சலி வாய்ப்பில்லாமல் வாழ்க்கை பாழானதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் நடிகர் ஜெய்யுடன் அஞ்சலி நடித்த பலூன் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் ஊட்டியில் தான் நடைபெற்றூள்ளது.

அப்போது படக்குழுவினரிடம் கதையை மாற்றச்சொல்லி ஜெய் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மறுத்ததால் ஜெய் கடும் கோபத்தில் இருந்திருக்கிறார். உடனே அஞ்சலியிடன் உனக்கு வயிறு வலிப்பதாக நடி, நான் உன்னை கூட்டிச்சென்றுவிடுகிறேன் என்று கூறியுள்ளார்.

அஞ்சலி அப்படியே செய்ய, படக்குழுவினர் காரை எடுத்து வந்துள்ளனர். அப்போது ஜெய் நானே கூட்டிக்கொண்டு போய் வருகிறேன் என்று கூறிவிட்டு அந்த நாள் முழுவதும் திரும்ப வரவில்லையாம். இதனால் அந்த ஒருநாள் ஷூட் ரத்து செய்துள்ளனர்.

இது ஒரு பக்கம் இருக்க, ஒரு ஓட்டலில் ஜெய், அஞ்சலிக்கு தனித்தனியாக ரூம் புக் செய்திருந்தனர். ஆனால் ஜெய் அவர் ரூமில் இல்லாமல் அஞ்சலி ரூமிலேயே இருந்துள்ளார்.

ரூம் பூட்டியே இருப்பதால் கேன்சல் செய்துவிடலாமா என்று தயாரிப்பாளர் தரப்பில் கேட்டுள்ளனர், வேண்டாம் என்று கூறி நஷ்டத்தையும் படக்குழுவினருக்கு கொடுத்திருக்கிறாராம். இதை பிரபல பத்திரிக்கையாளர் வித்தகன் சேகர் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *