முதல்முறையாக இளையராஜா குறித்து மனம் திறந்து பேசிய இசைபுயல்!

முதல்முறையாக இளையராஜா குறித்து மனம் திறந்து பேசிய இசைபுயல்!
  • PublishedJuly 11, 2023

இசையால் மக்களை தன் வசம் இழுத்த பிரபலம் தான் ஏஆர் ரகுமான். தன்னுடைய புது முயற்சியால் இவர் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்தும் வெற்றி கண்டிருக்கின்றன. இவர் இளையராஜாவிடம் பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இளையராஜா பற்றிய சில விடயங்களை ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துகொண்டுள்ளார்.  ஒரு இசைக்கலைஞனாய் கிசு கிசுக்கப்பட கூடிய விஷயங்களை எல்லாம் நான் இவரிடம் பார்த்ததில்லை என கூறியுள்ளார்.

அவ்வாறு தண்ணி,  புகை போன்ற எந்த பழக்கங்களும் இல்லாத எளிமையான சாமியாரை போலவே இவர் இருந்து தன் இசைக்கு உயிர் கொடுத்து வந்தார்.

இவரின் இத்தகைய தன்மை தான் இவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்தது எனவும்  அதை தான் முன் உதாரணமாக எடுத்துக் கொண்டதாகவும் கூறினார்.

எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து, படி படியாய் முன்னேறிய இவர்  75 கால அனுபவங்களைக் கொண்டு இன்றும் இளம் தலைமுறையினர்களுக்கு போட்டியாய் இசையமைத்து வருகிறார் என்பது வியப்பை ஏற்படுத்தி வருகிறது  எனவும் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *