கமலஹாசனுடன் உதட்டு முத்தம் ; அக்கா தங்கை இருவருக்கும் ஏற்பட்ட நிலை

கமலஹாசனுடன் உதட்டு முத்தம் ; அக்கா தங்கை இருவருக்கும் ஏற்பட்ட நிலை
  • PublishedSeptember 3, 2024

அண்மைக் காலமாக சினிமாவில் பாலியல் வழக்குகளும் அது தொடர்பான அறிக்கைகளும் வெளிவந்துள்ள நிலையில் பல நடிகைகளும் தமக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பிரபல நடிகை ராதிகா கூறியிருக்கும் கருத்தும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ராதிகா கேரவனில் கூட நடிகைகளுக்கு தெரியாமல் சிலர் கேமராக்கள் பொருந்துவதாக கூறி பகீர் கிளப்பினார்.

மேலும், நடிகை ராதிகா முத்தத்துக்கு பெயர் போன நடிகர் படத்தில் தன்னையும் தன்னுடைய தங்கையையும் கட்டாயப்படுத்தி முத்த காட்சியில் நடிக்க வற்புறுத்தியதாக பழைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து நடிகை ராதிகா தன்னுடைய பழைய பேட்டியில் கூறியுள்ளதாவது…

“பொதுவாகவே கமலஹாசன் நடிக்கும் படங்களில் முத்த காட்சிகள் இடம் பெறுவது வழக்கம். இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இப்படிப்பட்ட காட்சிகள் இளவட்ட ரசிகர்களை கவர்வதால் இது போன்ற காட்சிகளை வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படி தான் ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படங்களில் முத்த காட்சிகள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது.

ஒரு சில நடிகைகள் சகித்துக் கொண்டு இது போன்ற காட்சிகளின் நடித்தாலும், ஒரு சிலர் முத்த காட்சி காரணமாகவே கமல்ஹாசனின் படங்களில் நடிக்க தயங்குவார்கள்.

முத்த காட்சிக்கு நான் தயக்கம் காட்டியதன் காரணமாகவே, சிப்பிக்குள் முத்து திரைப்படத்திற்கு பின்னர் கமல்ஹாசன் உடன் நடிக்கும் படங்களை குறைத்துக் கொண்டேன்.

என்னை மட்டும் இன்றி என்னுடைய தங்கைக்கு கூட உதட்டோடு உதடு வைத்து முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என டார்ச்சர் செய்யப்பட்டார். அப்போது அதை நான் தடுத்ததால், சிலரது கோபத்திற்கு ஆளானேன். பல வாய்ப்புகளும் நான் இழக்க நேரிட்டது என நடிகை ராதிகா தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *