நடிகர் மோகன்லாலுக்கு உயர் விருதை அறிவித்தது மத்திய அரசு

நடிகர் மோகன்லாலுக்கு உயர் விருதை அறிவித்தது மத்திய அரசு
  • PublishedSeptember 20, 2025

நடிகர் மோகன்லால் மலையாள சினிமாவில் சூப்பர்ஸ்டார் ஆக வலம் வருபவர். மேலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவித்து இருக்கிறது மத்திய அரசு.

2023ம் ஆண்டுக்கான இந்த விருது தேசிய விருது வழங்கும் விழாவில் சேர்த்து வழங்கப்படும் எனவும் அரசு கூறி இருக்கிறது.

மோகன்லாலுக்கு உயரிய விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

2019ம் ஆண்டுக்கான விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது. அதை தற்போது 2023ம் ஆண்டுக்கான Dadasaheb Phalke விருது மோகன்லாலுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *