“Come with me” என மகனுக்காக ஏங்கும் ஹர்திக் பாண்டியா

“Come with me” என மகனுக்காக ஏங்கும் ஹர்திக் பாண்டியா
  • PublishedJuly 30, 2024

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது மனைவி நடாஷா ஆகியோருக்கு விவாகரத்தானது அனைவரும் அறிந்தது.

இந்த நிலையில், நடாஷா தனது மகனுடன் அவரது தாய் வீட்டுக்குச் சென்று விட்டார்.

2018 ஆம் ஆண்டில் தான் ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா ஸ்டான்கோவிக் முதல் முறையாக சந்தித்துக் கொண்டனர். அப்போது ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் நிலையான இடத்தை பிடித்து இருக்கவில்லை.

அந்த சமயத்தில் செர்பிய மாடல் மற்றும் நடிகையான நடாஷா உடன் அவர் பார்ட்டிகளுக்கு சென்றது பேசு பொருளானது. இந்த நிலையில் 2020 புத்தாண்டு அன்று ஹர்திக் பாண்டியா, நடாஷாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.

 

குடும்பத்தினர், நண்பர்கள் என யாரும் இன்றி தனியாக கடலுக்கு நடுவே ஒரு படகில் வைத்து அவர் மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தத்தை அறிவித்தார். அது அப்போது மிகப் பெரிய அளவில் வைரல் ஆனது.

பின்னர் 2020 மே மாதம் கொரோனா காலகட்டத்தில் ஹர்திக் மற்றும் நடாஷா குஜராத்தில் தங்கள் வீட்டிலேயே மிகவும் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த சில நாட்களிலேயே தாங்கள் முதல் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாக அறிவித்தனர்.

2020 ஜூலை மாதம் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார். அனைத்தும் சிறப்பாக சென்று கொண்டிருந்தது. பின்னர் 2023 பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று, ஹர்திக் பாண்டியா மீண்டும் நடாஷாவை விமரிசையான முறையில் திருமணம் செய்து கொண்டார். அதற்காக பல கோடிகள் செலவு செய்யப்பட்டது அப்போது பலரையும் வியப்புக்கு உள்ளாக்கியது.

இந்த நிலையில், அடுத்த சில மாதங்களில் அவர்களுக்கு இடையே பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் இருந்து ஹர்திக் பாண்டியா காயத்தால் விலகினார். அதன் பின்னர் அதில் இருந்து மீண்டு அணியில் இடம் பெற பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார்.

இதனிடையே நடாஷா, ஹர்திக் பாண்டியா உடனான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கினார். அப்போது இருவருக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. இந்த நிலையில் தாங்கள் இருவரும் பிரிவதாக ஒன்றாக அறிவித்துள்ளனர்.

தங்கள் மகன் அகஸ்தியாவுக்காக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என அறிவித்து பிரிந்துள்ளனர். மகன் தாயுடன் இருப்பதால் ஒரு தந்தையாக தனது மகனை ஹர்த்திக் பாண்டியா மிகவும் கவலையில் உள்ளார்.

இந்த நிலையில், இன்றைய தினம் அகஸ்தியாவின் பிறந்தநாள் தினமாகும். தனது இன்ஸ்டாவில் ‘baby come with me’ என்ற பாடலுடன் தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *