சம்மதிக்காவிடின் உன் நிர்வாண போட்டோக்களை லீக் பண்ணுவேன்.. நடிகையை மிரட்டியுள்ள தயாரிப்பாளர்!

சம்மதிக்காவிடின் உன் நிர்வாண போட்டோக்களை லீக் பண்ணுவேன்.. நடிகையை மிரட்டியுள்ள தயாரிப்பாளர்!
  • PublishedApril 5, 2023

பிரபல பாலிவுட் நடிகைக்கு கோ ப்ரொட்யூசர் கொடுத்த பாலியல் தொல்லை காரணமாக பொலிஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது. வங்காள மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. சமீபத்தில் காலா எனும் இந்தி படத்தில் நடித்து பாலிவுட்டிலும் நடிகையாக அறிமுகமானார்.

மேலும், அவர் நடிப்பில் விரைவில் ஷிபுர் எனும் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், அந்த படத்தின் இணைத் தயாரிப்பாளர் தான் நடிகையிடம் இப்படியொரு மோசமான வேலையை செய்திருப்பது அம்பலம் ஆகி உள்ளது.

2001ம் ஆண்டு வங்காள மொழியில் வெளியான ஹேமந்தர் பகி எனும் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்வஸ்திகா முகர்ஜி. 42 வயதாகும் பிரபல வங்காள நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி காலா எனும் இந்தி படத்தின் மூலம் பாலிவுட் நடிகையாக மாறி உள்ளார். இந்நிலையில், இணை தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுக்களை அடுக்கி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

40 வயது நடிகையின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து, அந்த வெப்சைட்டில் விடுவேன் என மிரட்டிய இயக்குனர் - புகாரளித்த நடிகை.. திரையுலகமே ...

இந்த ஆண்டு வெளியாக உள்ள ஷிபுர் படத்தில் மந்திரா பிஸ்வாஸ் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வஸ்திகா முகர்ஜிக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான தொல்லைகளை அந்த படத்தின் இணை தயாரிப்பாளரான சந்தீப் சர்கார் கொடுத்து வந்திருக்கிறார். ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமையை இழந்த நடிகை அவர் மீது பொலிஸில் புகார் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகைகள் எல்லாம் எந்தவொரு சிக்கலும் இல்லாமல் அட்ஜெஸ்ட்மென்ட் செய்றாங்க, உனக்கு இந்த படத்தில் நடிக்க வாய்ப்பும் கொடுத்து நிறைய சம்பளமும் வாங்கிக் கொடுத்ததே நான் தான் என் கூட ஒரு நாள் மட்டும் அட்ஜெஸ்ட் பண்ணு என நடிகையை பல முறை பல வழிகளில் கட்டாயப்படுத்தி இருக்கிறாராம் அந்த இணைத் தயாரிப்பாளர்.

புகைப்படங்களை மார்பிங் செய்து பாலியல் தொல்லை கொடுத்தனர்" - தயாரிப்பாளர் மீது நடிகை புகார் | nakkheeran

மேலும், நடிகையின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாணப் புகைப்படங்களை ஆபாச வலைதளங்களில் வெளியிடுவேன் என்றும் தனது இச்சைக்கு சம்மதிக்கவில்லை என்றால், உன் வாழ்க்கையையே அழித்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறாராம் அந்த இணைத் தயாரிப்பாளர்.

இணைத் தயாரிப்பாளரின் டார்ச்சர் தாங்க முடியாத நடிகை பல முறை தனக்கு இதெல்லாம் பிடிக்காது, வேண்டாம் என சொல்லியும் கேட்காத நிலையில், தற்போது சந்தீப் சர்கார் மீது கோல்ஃப் ஸ்டேஷன் பொலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்த விவகாரம் வெளியே தெரிந்த நிலையில், உடனடியாக அமெரிக்காவுக்கு சென்று தலை மறைவாகி விட்டார் சந்தீப் சர்கார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகைக்கு வந்த மிரட்டல் இமெயில்களை சைபர் கிரைம் பொலிஸார் உதவியுடன் விசாரித்து சந்தீப் சர்காரிடம் விசாரணைநடத்த பொலிஸார் முடிவு செய்து இருப்பதாக கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *