ஐஸ்வர்யா ராய்க்கு – அபிஷேக் பச்சன் விவாகரத்து சர்ச்சைக்கு பதில் கிடைத்தது…

ஐஸ்வர்யா ராய்க்கு – அபிஷேக் பச்சன் விவாகரத்து சர்ச்சைக்கு பதில் கிடைத்தது…
  • PublishedAugust 12, 2024

இந்தியாவிலிருந்து உலக அழகி பட்டம் வென்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் அந்தப் பட்டத்தை பெற்றவர்களாக இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் எப்போதும் ஸ்பெஷல்தான்.

உலக அழகி என்றாலே ஐஸ்வர்யா ராய்தான் இந்தியர்கள் மனதில் சட்டென்று தோன்றுவார். அந்த அளவுக்கு அவர் மக்கள் மனதில் நிரம்பி இருக்கிறார்.

இந்தச் சூழலில் அவர் தனது கணவர் அபிஷேக் பச்சனை பிரியவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் அதுகுறித்து அபிஷேக் இப்போது விளக்கமளித்திருக்கிறார்.

அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யார் ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் அவர்கள் விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்றும் வதந்திகள் தொடர்ந்து பரவிவந்தன.

ஆனால் அப்படி வதந்திகள் பரவியதை அடுத்து சில நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு முற்றுப்புள்ளி வைத்தனர். சூழல் இப்படி இருக்க அண்மையில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானியின் திருமணத்திலும் குடும்பத்தோடு கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராய்.

இந்நிலையில் தனக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் விவாகரத்து நடைபெறவிருப்பதாக வெளியான தகவல் குறித்து அபிஷேக் பச்சன் விளக்கமளித்திருக்கிறார். அவர் பேசுகையில், “எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து என்று வெளியாகும் செய்தி பற்றி பேச எதுவும் இல்லை. துரதிர்ஷ்டவசமாக அனைவரும் ஒரு பொய்யான செய்தியை பரப்புகிறார்கள். அது ஏன் செய்கிறார்கள் என்று எனக்கு புரிகிறது. நல்ல கதைகள் தேவைப்படுகின்றன. நாங்கள் பிரபலங்கள் என்பதால் எங்களை பயன்படுத்துகிறார்கள். எங்களுக்கு விவாகரத்து எல்லாம் ஆகவில்லை” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *