மனைவியின் உடந்தையுடன் பாலியல் துஷ்பிரயோகம்? நடன இயக்குநர் ஜானி கைது

மனைவியின் உடந்தையுடன் பாலியல் துஷ்பிரயோகம்? நடன இயக்குநர் ஜானி கைது
  • PublishedSeptember 19, 2024

கடந்த 2019ஆண்டு ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்பிடிப்பு சென்ற இடங்களில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அந்த பெண் ஆந்திராவின் ராய்துர்க்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அப்புகாரில் ஜானி மாஸ்டரின் மனைவியும் அதற்கு உடந்தையாக இருந்ததாக குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஆந்திர போலீசார், ஜானி முதல் முதலாக பாலியல் தொல்லை கொடுத்த போது, அப்பெண்ணுக்கு 18வயது கீழ் இருந்துள்ளதால் அவர் மீது போக்சோ வழக்கும் பதிவு செய்தனர்.

இதனிடையே நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து ஜானி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேபோல் அவர் திரைப்படங்களில் பணியாற்ற தெலுங்கானா ஃபிலிம் சேம்பர் தற்காலிக தடை விதித்தது. மேலும் அவர் உறுப்பினராக இருக்கும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கனவே இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு கல்லூரி ஒன்றுக்குள் நுழைந்து சண்டையிட்டதற்காக சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் புகார் எழுந்ததை தொடர்ந்து ஜானி மீது தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது பெண் நடனக் கலைஞர் அளித்த புகாரின் பேரில் சைதராபாத் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

சைதரபாத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஜானி ஆஜர்படுத்தப்பட்டு பின்பு ஹைதராபாத்திற்கு மாற்றப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *