“அந்த செய்தி உண்மை தான்…” முதன்முறையாக மனம் திறந்து பேசிய ஜெயம் ரவி

“அந்த செய்தி உண்மை தான்…” முதன்முறையாக மனம் திறந்து பேசிய ஜெயம் ரவி
  • PublishedOctober 15, 2024

ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிரதர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது.

இதனையொட்டி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக இருக்கிறார் ரவி. இதற்கிடையே தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்தும் செய்துவிட்டார். மேலும் மும்பையில் அவர் செட்டில் ஆகிவிட்டார் என்றும் ஒரு பேச்சு ஓடியது. இந்நிலையில் அதுகுறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் அவர்.

அவர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,

“பாலியூட்டில் நடிக்கப்போகின்றேன் என்ற செய்தி உண்மைதான். பாலிவுட் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் முன்னரே எனக்கு கொஞ்சம் வந்திருக்கின்றன. எனக்கு வந்தது எல்லாம் டபுள் ஹீரோ சப்ஜெட்டாக வந்திருந்தன. எனது கதாபாத்திரம் பிடிக்காததால் அவைகளில் நடிக்காமல் தவிர்த்துவிட்டேன்.

முக்கியமாக தமிழில் நாம் நல்ல நிலையில்தானே இருக்கிறோம். பிறகு ஏன் பாலிவுட் என்றும்; அங்கு சென்று இரண்டாவது ஹீரோவாக நடிக்க வேண்டுமா என்றும் நினைத்தேன்.

இப்போது பாலிவுட்டில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். அதுவுமே தமிழ் படங்களை முழுவதுமாக விட்டுவிட்டு போகவில்லை. பாலிவுட்டில் நடிப்பது எக்ஸ்ட்ராதான். தமிழ் படங்களுடன் சேர்ந்து ஹிந்தியிலும் நடிக்க முடிவு செய்துவிட்டேன்.

அதற்கான முயற்சிகள் போய்க்கொண்டிருக்கின்றன. முன்பு வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டேன். தற்போது அந்தனை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன். அங்கே வேலை செய்ய வேண்டும் என்றால் மும்பையில் செட்டிலாகித்தான் ஆக வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *