உயிரிழந்த ரசிகனின் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஜெயம் ரவி

உயிரிழந்த ரசிகனின் வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த ஜெயம் ரவி
  • PublishedApril 24, 2024

நடிகர் ஜெயம் ரவி தனது தீவிர ரசிகரான ராஜா உயிரிழந்ததை அடுத்த, அவரது வீட்டுக்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார். அவர் ரசிகரின் வீட்டுக்குச் சென்றபோது எடுத்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

சென்னை எம் ஜி ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தில் தலைவராக இருந்த ராஜாவின் வீட்டிக்கு ஜெயம் ரவி தீடீரென விசிட் செய்துள்ளார்.

ராஜா சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானதால், அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறச் சென்றுள்ளார்.

33 வயதான ராஜா ஜெயம் ரவி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் நற்பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

ராஜா உயிரிழந்ததை அறிந்த ஜெயம் ரவி, அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். ராஜாவின் குடும்பத்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *