கைதி 2-க்கு நடந்தது என்ன? நடுவில் வந்த சுந்தர் சி

கைதி 2-க்கு நடந்தது என்ன? நடுவில் வந்த சுந்தர் சி
  • PublishedAugust 21, 2025

தமிழ் சினிமாவில் ஆக்ஷன் படங்களுக்கு புது வரவேற்பு கொடுத்த ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். ஆனால், ‘கைதி 2’ படப்பிடிப்பு தாமதமாகி வருவதால், நடிகர் கார்த்தி தனது கால்ஷீட்டை இயக்குநர் சுந்தர் சி-யின் புதிய படத்துக்கு ஒதுக்கியிருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோகேஷின் LCU (லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ்) படங்களான ‘விக்ரம்’, ‘லியோ’வைத் தொடர்ந்து ‘கைதி 2’ பிரம்மாண்டமாக இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. கமல்ஹாசனின் விக்ரம் கேரக்டர் இதில் என்ட்ரி கொடுக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வந்தன.

ஆனால், லோகேஷின் மற்ற திட்டங்கள், ஷெட்யூல் ப்ராப்ளம்ஸ் காரணமாக ‘கைதி 2’ இன்னும் டேக்-ஆஃப் ஆகலை. இதனால், கார்த்தி இந்த கேப்பை பயன்படுத்தி சுந்தர் சி-யின் புது படத்துக்கு கமிட் ஆகியிருக்கார்.

சுந்தர் சி-னு சொன்னாலே காமெடி, கலகலப்பு, கமர்ஷியல் மசாலானு மனசுல தோணும். ‘அரண்மனை’ சீரிஸ், ‘கலகலப்பு’ மாதிரியான படங்களால் ரசிகர்களை சிரிக்க வைச்சவர் சுந்தர் சி. இப்போ கார்த்தியை வைச்சு ஒரு புது படத்தை இயக்குறதுக்கு தயாராகி வராரு.

‘கைதி 2’ 2026-ல் ஷூட்டிங் ஆரம்பிக்க வாய்ப்பிருக்கு. அதுவரை, கார்த்தி சுந்தர் சி படம், ‘சர்தார் 2’ மாதிரியான ப்ராஜெக்ட்களில் ரசிகர்களை மகிழ்விப்பார். சுந்தர் சி-யின் புது படம் கார்த்தியின் வித்தியாசமான தோற்றத்தையும், கலகலப்பான பாணியையும் காட்டுமா? இல்ல ‘கைதி’ மாதிரி ஆக்ஷன் த்ரில்லரா இருக்குமா? காத்திருந்து பார்ப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *