“கல்கி – 2” படக்குழு வெளியிட்ட அதிர்ச்சி அப்டேட்

“கல்கி – 2” படக்குழு வெளியிட்ட அதிர்ச்சி அப்டேட்
  • PublishedAugust 31, 2024

நடிகர் பிரபாஸின் கல்கி 2898 ஏடி படம் மாஸ் வெற்றி கண்டது. கல்கி படத்தின் இரண்டாவது பாகம் குறித்தும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் துவங்க உள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

முதல் பாகம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களுக்கு சிறப்பான திரில்லிங் அனுபவத்தை கொடுத்திருந்த நிலையில் 2வது பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதீதமாக காணப்படுகிறது.

இந்நிலையில் கல்கி 2 படத்தின் சூட்டிங் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் எடுக்கப்பட்டு மிகவும் பிரம்மாண்டமான வகையில் படம் உருவாக உள்ளதாகவும் படம் 2028ம் ஆண்டில் தான் ரிலீசாகும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் அறிவித்துள்ளார்.

முன்னதாக கல்கி 2898 ஏடி படமே நீண்ட காலங்கள் கழித்தே ரிலீசானது. இந்நிலையில் இரண்டாவது பாகத்திற்கு நாம் இன்னமும் நான்கு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற அறிவிப்பு ரசிகர்களை மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கும் அதே நேரத்தில் சோர்விக்கும் உட்படுத்தியுள்ளது.

ஆனால் காற்றாக பறக்கும் காலத்தை கவனத்தில் கொண்டால் இந்த படம் மிகச் சிறப்பான அனுபவத்தை தரும் பட்சத்தில் இந்த நான்கு ஆண்டுகள் என்பது ரசிகர்களை ஜஸ்ட் லைக் தட் என கடக்க செய்யும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே, கல்கி 2 படம் முதல் பாகத்தை காட்டிலும் ரசிகர்களுக்கு மேலும் உற்சாக அனுபவத்தை கொடுக்கும் என்றும் ஸ்வப்னா தத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு ஆசுவாசத்தை கொடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *