ஒரே வண்ண ஆடை குறித்து ஓபனாக பேசிய கெனிஷா

ஒரே வண்ண ஆடை குறித்து ஓபனாக பேசிய கெனிஷா
  • PublishedJune 9, 2025

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற உறுதியாக இருக்கும் நிலையில், இந்த வழக்கு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, அண்மையில் நடைபெற்ற தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் ப்ரீத்தா திருமணத்தில் பாடகி கெனிஷா உடன் ரவி மோகன் கலந்துகொண்டதால், அந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் கடுப்பான ஆர்த்தி தன் குழந்தைகள் குறித்தும் அவரது திருமண வாழ்க்கை குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இந்த பிரச்சனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பேட்டி ஒன்றில் கெனிஷா பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” நான் சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் கலந்து கொண்டேன். எனக்கு பல வருடங்களாக ஐசரி கணேஷ் சாரை தெரியும். அதனால் தான் திருமணத்தில் கலந்து கொண்டேன்.

அப்போது என்னுடன் ரவி மோகனும் வந்திருந்தார். நாங்கள் ஒரே வண்ணம் உடை அணிந்தது தான் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டது.

ஆனால், நண்பர்கள் ஒரே வண்ணம் உடை அணிவது பெரிய விஷயம் இல்லை. அது ஏன் பெரிதாக பேசப்படுகிறது என்று தெரியவில்லை.

இதை ஒரு காரணமாக வைத்து சிலர் ஐசரி கணேஷ் சாரை திட்டி இருந்தனர். இதனால் நான் அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்கள் பேசுவது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *