டிமாண்டி காலனி 3 வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்

டிமாண்டி காலனி 3 வெளிவந்த லேட்டஸ்ட் தகவல்
  • PublishedApril 1, 2025

கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்து அனைவரையும் மிரள வைத்த திரைப்படம் டிமாண்டி காலனி. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருள்நிதி நடித்திருந்தார்.

முதல் பாகத்தை தொடர்ந்து கிட்டதட்ட 9 ஆண்டுகளுக்கு பின் டிமாண்டி காலனி 2 வெளிவந்தது. ஆம், கடந்த ஆண்டு டிமாண்டி காலனி 2 திரைப்படம் வெளிவந்து மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் அருள்நிதி உடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்திற்காக துவக்கத்தை மிரட்டலான முறையில் வழங்கியிருந்தார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இதனால் டிமாண்டி காலனி 3 திரைப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், டிமாண்டி காலனி 3 திரைப்படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் துவங்கிவிட்டதாம். அடுத்த ஆண்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *