ரஜினி மகள் வீட்டில் பாரிய திருட்டு – பல லட்சம் பெறுமதியான தங்கம் கொள்ளை

ரஜினி மகள் வீட்டில் பாரிய திருட்டு – பல லட்சம் பெறுமதியான தங்கம் கொள்ளை
  • PublishedMarch 20, 2023

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் பல லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியான ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பிறகு தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், வீட்டில் பணியாற்றும் பணியாளர்கள் திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *