ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதை திருடிவிட்டார்!! கிளம்பியது புது பூகம்பம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இதை திருடிவிட்டார்!! கிளம்பியது புது பூகம்பம்
  • PublishedMay 24, 2023

சசிகுமார் நடித்த அயோத்தி, விஜய்சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்கள் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருந்தமை யாவரும் அறிந்ததே.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் லால் சலாம் படத்தின் கதை தன்னுடைய கதை என இயக்குநர் பாலுமகேந்திராவின் உதவி இயக்குநரான மோகன் என்பவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை வைத்து 3, கவுதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தார். அதன் பின்னர் படங்களை இயக்குவதை முற்றிலுமாக நிருத்திவிட்டு குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

சமீபத்தில் தனுஷை பிரிந்த நிலையில், மீண்டும் படம் இயக்க ஆரம்பித்துள்ள ஐஸ்வர்யா ஒரு ஆல்பம் பாடலை இயக்கிய நிலையில், தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் கேமியோ ரோலில் ரஜினிகாந்த், கபில் தேவ் நடித்து வரும் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.

எனினும் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநர் மோகன் என்பவர் கடந்த ஆண்டு லைகா நிறுவனத்துக்கு தான் அனுப்பிய கதையைத்தான் இது என்று சர்ச்சையைக் கிளப்பிய்ள்ளார்.

அது இரு நண்பர்கள் உதைப்பந்து விளையாட்டில் எதிர்கொள்ளும் பிரச்சனை பற்றிய கதைதான்.
அந்த கதையை அப்படியே மாற்றி கிரிக்கெட் விளையாட்டை வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வருகிறாரா? என்கிற சந்தேகத்தை மோகன் கிளப்பி உள்ளார்.

மோகனின் கதையை படித்துப் பார்த்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பு இந்த கதைக்கும் அந்த கதைக்கும் சம்பந்தமே இல்லை என்றும் இது வேறு கதை அது வேறு கதை என்றும் சொல்லி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எப்படி இருந்தாலும், படத்தின் டீசர் காட்சிகள் மற்றும் டிரைலர் காட்சிகள் வெளியாகும் போது உண்மை என்ன? என்பது குறித்து தெரிந்து விடும் என்கின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *