சிகப்பு சேலையில் சிளிர்க்க வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

சிகப்பு சேலையில் சிளிர்க்க வைக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா
  • PublishedOctober 9, 2024

ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நயன்தாரா சந்திரமுகி, சிவகாசி, கஜினி என வரிசையாக பெரிய படங்களில் நடித்து வந்த வேகத்திலேயே ஸ்டார் ஆனார்.

 

சிம்புவுடன் வல்லவன் படத்தில் நடிக்கும் போது காதலில் விழுந்த நயன்தாரா அதன் பின்னர் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக அவரை பிரேக்கப் செய்து பிரிந்தார்.

அதன் பின்னர் விஜய்யின் வில்லு படத்தின் இயக்குநரான பிரபுதேவாவை காதலிக்க ஆரம்பித்தார்.

ஆனால், பிரபுதேவாவின் முதல் மனைவி நடத்திய பஞ்சாயத்து காரணமாக இருவரும் பிரிந்தனர். கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான் படத்தில் நடிக்கும் போது போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலிக்கும் போதே ரெஜிஸ்டர் திருமணம் செய்துக் கொண்டதாக வாடகைத்தாய் பிரச்சனை வரும் போது கூறியிருந்தனர். இருவரும் ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்ட பிரம்மாண்ட திருமணம் மகாபாலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த நிலையில், உயிர் உலக் என இரு குழந்தைகளுக்கு தாயாகவும் பிரபல நடிகையாகவும் மற்றும் தொழிலதிபராகவும் திகழ்ந்து வருகின்றார்.

இந்த நிலையில், நயன்தாரா தற்போது சிகப்பு நிற புடவையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *