சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா : கையில் கிடைத்த வாய்ப்பு!

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா : கையில் கிடைத்த வாய்ப்பு!
  • PublishedJune 30, 2023

நடிகை நயன்தாரா தனது நீண்டநாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டவுடன், அவரது படவாய்ப்புகள் குறைந்தது.

இதனையடுத்து தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்தினார். அதுவும் கைக்கொடுக்கவில்லை. இந்நிலையில். அவருடைய மார்க்கெட் சரிந்து விட்டது என்றுக்கூட சில கதைகள் கிளம்பின.

இதற்கெல்லம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த படத்திற்கு மண்ணாங்கட்டி என பெயரிடப்பட்டிருக்கிறதாம். படத்திற்கு பூஜையும் போடப்பட்டு விட்டது. ஷூட்டிங் தான் ஆரம்பிக்க வேண்டும்.

இந்த படத்தை பிளாக் ஷீப் யூடியூப் சேனலில் பணிபுரியும் ஒருவர்  இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. நயன்தாராவுக்கு எப்போதுமே தனிக் கதாநாயகியாக நடிக்கும் படங்கள் கை கொடுக்கும்.

திருமணமான பின் மார்க்கெட் மந்த நிலையில் இருக்கும் இவருக்கு இந்த படம் எந்த அளவுக்கு நயனுக்கு வெற்றியை தரும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *