என்ன ஜோதிகா, இப்படி செய்யுறீங்க? வச்சு செய்யும் நெட்டிசன்கள்

என்ன ஜோதிகா, இப்படி செய்யுறீங்க? வச்சு செய்யும் நெட்டிசன்கள்
  • PublishedJuly 18, 2024

ஜோதிகா எப்போ மும்பைக்கு குடி போனாரோ, அதில் இருந்து ஜோதிகா மீதான நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தன்னுடைய பாலிவுட் ஆசையால் கணவர் சூர்யாவையும் அந்த பக்கத்திற்கு இழுக்கிறார் என செய்திகளும் உலா வந்து கொண்டிருக்கின்றன.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த ஜோதிகாவை தமிழ் சினிமா ரசிகர்கள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றார்கள். ஆனால் மற்ற மொழி படங்கள் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்ததும் தமிழ் சினிமாவில் என்னை யாரும் மதிக்கவில்லை என பொத்தாம் பொதுவாக ஒரு பேட்டியை கொடுத்தது தான் இதற்கு எல்லாம் காரணம்.

அதற்கும் அப்ப்ால் ஒன் உள்ளது. அது என்ன தெரியுமா? ராட்சசி பட சமயத்தில் தஞ்சாவூரில் கோயிலுக்கு இவ்வளவு செலவு பண்ணுவதற்கு மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளுக்கு செலவு பண்ணலாம் என பேசியிருந்தார்.

ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோயிலை தான் ஜோதிகா இப்படி விமர்சிக்கிறார் என அப்போது பல எதிர்ப்புகள் இருந்தது.

இப்போ முகேஷ் அம்பானி பையன் கல்யாண வீட்டுக்கு போன ஜோதிகாவிடம் மேடம் உங்க அறிவுரையை அங்க சொல்லலையா என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் இணையவாசிகள்.

இவ்வளவு கோடிகள் செலவு பண்ணி திருமணம் செய்வதற்கு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டலாமே என முகேஷ் அம்பானிக்கு அறிவுரை சொல்ல வேண்டியது தானே, மும்பைக்கு போனதும் அப்படியே மாறிட்டீங்களா என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம், வடநாட்டுக்கு சென்று அவர்களின் கலாச்சாரத்திற்கு மாறிவிட்டீர்களா என காரசார விமர்சனங்களையும் எடுத்து வைத்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *