கருடனுக்கு வந்த “ஏழு கோடி” தலைவலி… அசால்டாக முடித்து வைத்தார் சூரி

கருடனுக்கு வந்த “ஏழு கோடி” தலைவலி… அசால்டாக முடித்து வைத்தார் சூரி
  • PublishedJune 4, 2024

சூரி கோலிவுட்டில் இப்போது முக்கியமான நடிகராக உருவெடுத்துவிட்டார். குறிப்பாக காமெடியன் என்ற இடத்திலிருந்து கதை நாயகன் என்ற இடத்துக்கு நகர்ந்திருக்கிறார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் மெகா ஹிட்டாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.

சூழல் இப்படி இருக்க கருடன் படத்துக்கு பிரச்னை வந்ததும் அதற்கு சூரி செய்த செயலும் தெரியவந்திருக்கிறது. அதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் சூரிக்குப் பெரிய மனது என்று கூறிவருகிறார்கள்.

சினிமாவில் வெல்ல வேண்டும் என்று போராடியபோது ஆடிஷனில் கலந்துகொண்ட இடத்தில் பசியின் காரணமாக மயங்கி விழுந்தார் சூரி.

தான் சம்பாதித்த பிறகு அதே இடத்தை வாங்கி இப்போது தனது அலுவலகமாக மாற்றியிருக்கிறார். இதனைப் பார்த்த பலரும் வெற்றி என்றால் இதுதான் வெறித்தனமான வெற்றி என்று சூரிக்கு பாராட்டு தெரிவித்தனர்.

வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து கதையின் நாயகனாக மாறினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. சூரியும் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை அள்ளினார்.

அதனையடுத்து ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்திலும் கதை நாயகனாக நடித்தார். கடைசியாக அவர் கதையின் நாயகனாக கருடன் படத்தில் நடித்தார். படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது.

படம் மெகா ஹிட்டடித்திருக்கிறது. இதுவரை 18 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. சூரியின் நடிப்பையும் பலர் பாராட்டுகின்றனர். எனவே இனி அவர் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பது உறுதியாகியிருக்கிறது.

இந்நிலையில் கருடனுக்கு நடந்த பிரச்னை தெரியவந்திருக்கிறது. அதாவது கருடன் சொன்ன தேதியில் ரிலீஸாக ஏழு கோடி ரூபாய் தேவைப்பட்டதாம். இதை தெரிந்துகொண்ட சூரி எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த ஏழு கோடி ரூபாய்க்கு தான் பொறுப்பேற்றுக்கொண்டு படத்தை ரிலீஸ் செய்ய உதவினாராம்.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் கருடன் படத்துக்காக செம ரிஸ்க் எடுத்திருக்கிறாரே சூரி. அவருக்கு பெரிய மனதுதான் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *