ஓவியாவின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டது அந்த நடிகர்தானாம்..

ஓவியாவின் அந்தரங்க வீடியோவை வெளியிட்டது அந்த நடிகர்தானாம்..
  • PublishedOctober 15, 2024

ஓவியா தொடர்பான வீடியோதான் கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் டாக் ஆஃப் டவுனாக இருக்கிறது. அந்த வீடியோவில் இருப்பது தான் இல்லை என்பதை இதுவரை அவர் கூறவில்லை.

அதனையடுத்து யார் அந்த வீடியோவை வெளியிட்டிருப்பார் என்றும் பலர் புலனாய்வு செய்ய ஆரம்பித்தார்கள்.

இந்தச் சூழலில் நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் இந்த விஷயம் குறித்து பேசியிருக்கும் சில விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

பேட்டியில் பேசிய அவர்,

“அந்தரங்க வீடியோவில் இருப்பது தான் தான் என ஓவியா தரப்பில் சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்த வீடியோவை வெளியிட்டது பிடிக்கவில்லை என்பதற்காக கேரள சைபர் க்ரைமில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே மூன்றெழுத்து நடிகையின் குளியல் வீடியோ வந்தது. ஆனால் அதில் இருந்தது தான் இல்லை என அந்த நடிகை சமாளிக்கப்பார்த்தார்கள். கடைசியில் அந்த வீடியோ வீடியோ உண்மைதான் என்று ஆகிவிட்டது.

இப்போது ஓவியாவின் வீடியோவில் டாட்டூவால் ஓவியா மாட்டிக்கிட்டார். ஓவியாவும் அதை மறைக்கவில்லை. அந்த வீடியோ மாணவர்களுக்கு பயன்படாது. இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு பயன்படலாம்.

இதற்கு முன்பு ஓவியா கொடுத்த பேட்டி ஒன்றில் நான் வேலையில்லாமல் இருந்தது உண்மைதான். நான் நடிகை என்பதால் எனக்கு அதிக செலவு இருக்கும். அதன் காரணமாக நிறைய பேரோடு டேட்டிங் செய்திருக்கிறேன்.

என்னுடன் டேட்டிங் வருபவர்கள் என்னை குடிக்க சொல்கிறார்கள். அப்போது என்னால் முடியாது என்றா சொல்ல முடியும். இப்போது நான் டேட்டிங், போதை பழக்கங்களை குறைத்துவிட்டேன் என்றும் வெளிப்படையாக சொன்னவர் ஓவியா.

இப்படி சினிமாவில் சொன்ன முதல் நடிகை ஓவியா மட்டும்தான். யாருமே இங்கே கண்ணகி இல்லை என்று கண்ணதாசனே எழுதியிருக்கிறார். அப்படி இருக்கும்போது ஓவியா வெளிப்படையாக ஒத்துக்கொள்கிறார். அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைத்தால் அவர் ஏன் இப்படியெல்லாம் போகப்போகிறார்.

சரியான வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் எத்தனை நடிகைகள் இப்படி தடம் மாறியிருக்கிறார்கள் தெரியுமா. ஒன்று கோடீஸ்வரருக்கு கம்பெனி கொடுப்பார்கள் இலை என்றால் இப்படி ஆகிவிடுவார்கள். யாரும் தடுத்து நிறுத்தமுடியும். நடிகர் தாரிக்குடன் லிவிங் டூ கெதரில் ஓவியா இருந்திருக்கிறார். அவரை திருமணம் செய்ய நினைத்தபோதுதான் இந்த வீடியோவை அவர் வெளியிட்டதாக சைபர் க்ரைமில் ஓவியா புகார் கொடுத்திருக்கிறார்.

அந்த வீடியோவில் இருப்பது ஓவியாவும், தாரிக்கும்தான்” என கூறியிருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்களோ கூட இருந்த பார்த்த மாதிரியே பேசுறாரே. எந்த ஆதாரத்தை வைத்துகொண்டு அந்த வீடியோவில் இருப்பது தாரிக்தான் என பயில்வான் ரங்கநாதன் கூறுகிறார் என்றும் ஏன் தொடர்ந்து இப்படி ஆதாரமே இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார். இந்தத் தவறை அவர் எப்போதுதான் திருத்திக்கொள்ளப்போகிறாரோ என்று கேள்விகள் எழுப்பிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *