போயஸ் கார்டன் மோகத்தால் தனுஷூக்கு ஏற்பட்ட நிலை… பாய்ந்தது வழக்கு

  • PublishedJune 15, 2024

தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் இடையே விவாகரத்து அறிவிப்பு வெளியானதில் இருந்தே தனுஷ் ரொம்பவும் சைலன்ட் ஆக தான் இருக்கிறார்.

ஆனால் தற்போது தனுஷ் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

தனுஷ் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக ஒரு வீடு கட்டி இருக்கிறார் என தெரியும். ஆனால் அந்த வீட்டில் தனுஷ் மற்றும் அவருடைய மகன்கள் அவ்வப்போது வந்து விட்டுப் போவது மட்டும் தான் நிரந்தரமாக யாரும் தங்கவில்லை.

அதற்குள் அதே ஏரியாவில் இன்னொரு வீட்டை வாங்கி இருக்கிறார். அந்த வீட்டில் ஏற்கனவே ஒரு குடும்பம் லீஸ் அக்ரீமெண்டில் வசித்து வந்து கொண்டிருக்கிறார்கள். வீட்டை விற்கும் போதே அந்த ஓனர் அக்ரிமெண்ட் ஜனவரி மாதம் தான் முடிகிறது அப்போதுதான் வீட்டில் இருப்பவர்கள் காலி செய்வார்கள் என தெரிவித்திருக்கிறார்.

எல்லாம் தெரிந்து வீட்டை வாங்கிவிட்டு தனுஷ் பெரிய வேலையை பார்த்து இருக்கிறார். அக்ரிமெண்ட் முடிவதற்கு முன்பே அந்த வீட்டில் இருப்பவர்களை காலி பண்ண திட்டமிட்டு இருக்கிறார்.

தனுஷ் பெயரை சொல்லி சில ஆட்கள் தங்களை வந்து மிரட்டுவதாக அந்த குடும்பத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து விட்டார்கள்.

விஷயம் பெருசானதும் அந்த குடும்பத்தினரை அழைத்து சமரசம் பேசி விட்டார் தனுஷ் என்ற செய்தியும் வந்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *