CSK வீரருடன் காதலா? உண்மையை போட்டுடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை

CSK வீரருடன் காதலா? உண்மையை போட்டுடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை
  • PublishedMarch 27, 2024

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரை காதலிப்பதாக பரவிய தகவல் குறித்து பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் டிவியில் டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. சன் டிவி சீரியல்களுக்கே சவால்விடும் வகையில் விறுவிறுப்பான திரைக்கதை உடன் பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் இனியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நேஹா. கேரளாவை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் பள்ளி மாணவியாக இந்த சீரியலில் அறிமுகமானார். தற்போது கல்லூரி செல்லும் பெண்ணாக நடித்து வருகிறார்.

இதனிடையே பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா குறித்த கிசுகிசு ஒன்று வைரலாக பரவியது. அது என்னவென்றால், அவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரனாவும் காதலித்து வருவதாக பேச்சு அடிபட்டது. இதற்கு காரணம் நேஹா தான்.

அவர் பதிரனா குறித்து தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஸ்டேட்டஸ் போட்டதை பார்த்து இவர்கள் காதலிப்பதாக பேசத் தொடங்கினர். இதுகுறித்து நேஹாவும் அமைதி காத்தி வந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது பதிரனா உடனான காதல் வதந்தி குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் நேஹா. அதன்படி அவர் கூறியதாவது :

“எனக்கு கிரிக்கெட் பார்க்கும் பழக்கம் இல்லை. ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டில் அருகில் இருந்தவர் சிஎஸ்கே போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தான் பதிரனா பற்றி என்னிடம் கூறினார். அவர் இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததை நானும் எனது ஸ்டோரியில் பதிவிட்டேன்.

நான் போட்ட அந்த பதிவுக்கு பின்னர் பதிரனாவை நான் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவ தொடங்கின. அதைக் கேட்கும் போது எனக்கும் ஜாலியாக இருந்ததால் நானும் அதை அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் உண்மையில் பதிரனாவை நான் நேரில் கூட பார்த்தது இல்லை.

அதேபோல் நிஜ வாழ்க்கையில் நான் ஒருமுறை மட்டும் காதல் தோல்வியை சந்தித்திருக்கிறேன். அந்த காதல் தோல்வியால் நான் கண்ணீர்விட்டு அழுதேன் என்றும் நேஹா கூறி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *