மீண்டும் அப்பாவாகினார் பிரபுதேவா!!

மீண்டும் அப்பாவாகினார் பிரபுதேவா!!
  • PublishedJune 10, 2023

இந்திய அளவில் பிரபலமான நடன அமைப்பாளர் பிரபுதேவா. இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என ரசிகர்களால் புகழப்படும் பிரபுதேவாவின் நடனத்திற்கு ஒட்டுமொத்த இந்திய திரை ரசிகர்களும், பிரபலங்களும் அடிமை.

அவரது நடனத்தை பார்த்து பலரும் இன்றுவரை பிரமிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபல நடன இயக்குநராக இருந்த சுந்தரம் மாஸ்டரின் இரண்டாவது மகன் பிரபுதேவா.

பிரபுதேவாவின் அட்டகாசமான கோரியோகிராஃபி: பிரபுதேவா நடன அமைப்பாளராக பணியாற்றும்போது அனைத்து நடிகர்களுமே சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தினர்.

ஏன் நடனத்தில் கிண்டலடிக்கப்பட்ட விஜயகாந்த்கூட பிரபுதேவா நடன அமைப்பில் அட்டகாசமாக ஆடியிருப்பார். அதேபோல் அவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு நடனம் அமைத்தார்.

நடன அமைப்பாளராக மட்டுமின்றி பிரபுதேவா நடிகராகவும் புகழ் பெற்றவர். காதலன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான பிரபுதேவா தொடர்ந்து ராசைய்யா, விஐபி, மின்சாரக்கனவு, டைம் என ஏராளமான படங்களில் நடித்தார். அந்தப் படங்களும் ஹிட்டாகின. இதனால் 90களில் முன்னணி நடிகர்கள் வரிசையில் பிரபுதேவா இருந்தார். பிரபுதேவா கடைசியாக பகீரா படத்தில் நடித்திருந்தார்.

பிரபுதேவா தனது முதல் மனைவியான ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயனுடனான பிரேக்கப்புக்கு பிறகு ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இரண்டாவது திருமணம் செய்துகொண்டாலும் தனது முதல் மனைவியின் மகன்களுடன் அதிக நேரம் செலவிட்டுவருகிறார் பிரபுதேவா.

இந்நிலையில் பிரபுதேவாவுக்கும், ஹிமானி சிங்கிற்கும் திருமணம் நடந்து மூன்று வருடங்கள் நிறைவடைகின்றன. இந்தச் சூழலில் ஹிமானி சிங் பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார்.

இதன் மூலம் பிரபுதேவா மீண்டும் தந்தையாகியிருக்கிறார். இதனையடுத்து பிரபுதேவாவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *