கதையை விட கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரதீப் ரங்கநாதன்!

கதையை விட கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பிரதீப் ரங்கநாதன்!
  • PublishedApril 5, 2023

லவ் டுடே திரைப்படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இந்த படத்தில் நயன்தாரா சிறப்பு தோற்றத்தில் நடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் உறுதியான அப்டேட் இன்னும் வராமல் உள்ளது. இதனிடையே இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸின் அசிஸ்டன்ட் இயக்குனரின் கதையில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க போகிறாராம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படம் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த படத்தில், படத்தின் கதையை காட்டிலும், கதாநாயகியை தேர்வு செய்வதில் தான் பிரதீப் மும்முரமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இயக்குனர் மிதுன் இயக்கவுள்ள இப்படத்தில் அக்கடு தேசத்து நடிகைகளான ராஷ்மிக மந்தனா அல்லது ப்ரியங்கா மோகன் நடிக்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் யாராவது ஒருவருடன் ஜோடி போட்டால் கூட பிரதீப் ரங்கநாதனின் மார்க்கெட் தென்னிந்திய அளவில் அதிகமாகும் என்பதால் இந்த வாய்ப்பை பிரதீப் ரங்கநாதன் பயன்படுத்தியுள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *