யோகி பாபுவை சும்மா விடக்கூடாது…ரஜினிகாந்த்

யோகி பாபுவை சும்மா விடக்கூடாது…ரஜினிகாந்த்
  • PublishedJune 1, 2025

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த படம் ஜெயிலர்.

மாஸ் ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

படம் உலகளவில் மாபெரும் வசூலை குவித்து, தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாறியது. ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 – ம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

இந்நிலையில், நடிகர் யோகி பாபு இப்படம் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ” இப்பொழுது உள்ள இயக்குநர்களில் அதிக நகைச்சுவை உணர்வுள்ள இயக்குநர் என்றால் அது நெல்சன் மட்டுமே.

ரஜினிகாந்த் சார் ஒவ்வொரு நாளும் மிகவும் ஆர்வத்துடன் செட்டுக்கு வருவார். மேலும், ரஜினி சார் நெல்சனிடம், நம்ம யோகி பாபுவை சும்மா விடக்கூடாது. என்னை ஜெயிலர் 1-ல் மிகவும் கிண்டல் செய்து விட்டார். இந்த பாகத்தில் அதை சரிகட்ட வேண்டும் என கூறியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *