யாழ்ப்பாணத்து கடற்கரையில் புதிய ஹீரோயின்…

யாழ்ப்பாணத்து கடற்கரையில் புதிய ஹீரோயின்…
  • PublishedOctober 1, 2024

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த உள்ளத்தை அள்ளித்தா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை தான் ரம்பா.

அதையடுத்து அவருக்கு செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, அன்புடன், ஆனந்தம், மிலிட்டரி, 3 ரோஸஸ் என தமிழ் படங்கள் வாய்பு வந்துக்கொண்டே இருந்தது.

பின் நடிகை ரம்பா 2010 ஆம் ஆண்டில் இந்திர குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

ரம்பாவின் கணவர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவராவார். இவர்கள் யாழ்ப்பாணத்தில் புதிய தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில அடிக்கடி யாழ்ப்பாணம் வரும் ரம்பா, மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக தனியார் விமானம் ஒன்றில் தனது குடும்பத்தினருடன் வருகை தந்துள்ளார்

இதன்போது யாழ்ப்பாணம் கடற்கரையில் அவர்கள் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இதில் ரம்பாவின் மகள் அடுத்த ஹீரோயின் ரெடி என்று கூறும் அளவுக்கு அவரது அழகு கொள்ளை கொள்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *