இலங்கையரை திருமணம் முடித்த ரம்பாவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்திருக்கின்றீர்களா?

இலங்கையரை திருமணம் முடித்த ரம்பாவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்திருக்கின்றீர்களா?
  • PublishedJanuary 4, 2024

தனது 15 வயதில் மலையாளத்தில் அறிமுகமான ரம்பாவின் முதல் படம் வினீத்துடன் நடித்து 1992ஆம் ஆண்டு வெளியான சர்கம் ஆகும். தொடர்ந்து அவருடனே அதே ஆண்டில் சம்பகுளம் தச்சன் என்ற படத்திலும் நடித்தார்.

தொடர்ந்து தெலுங்கில் 1993ஆம் ஆண்டு வெளியான ஆ ஒக்கடு அடக்கு படத்தில் நடித்தார்.

நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். தெலுங்கு, ஹிந்தியிலும் அவர் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.

முதலில் மலையாளத்தில் அறிமுகம் ஆன அவர் அதன் பின் தெலுங்கில் நடித்தார். அவர் பள்ளி படிக்கும் காலத்திலேயே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துவிட்டதாம்.

தமிழில் உழவன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்பா. அப்படத்தை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஜபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

கடைசியாக பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்த ரம்பா, 2010ம் ஆண்டு இலங்கையை பூர்வீகமாக கொண்ட கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்.

கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார்.

இவரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *