ஆண் உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி, எலும்பு உடைக்கப்பட்டு கொடூர கொலை – நடிகரின் வெறிச்செயல்

ஆண் உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி, எலும்பு உடைக்கப்பட்டு கொடூர கொலை – நடிகரின் வெறிச்செயல்
  • PublishedSeptember 6, 2024

கன்னட நடிகர் தர்ஷனின் ரசிகர் கொல்லப்பட்டது தொடர்பான குற்றப்பத்திரிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதில், நெஞ்சு எலும்பு உடைக்கப்பட்டு, உடல் முழுவதும் 31 இடத்தில் பலத்த காயம் ஏற்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னட திரைப்பட நடிகர் தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணமாகி விஜயலட்சுமி என்ற மனைவியும் மகனும் இருக்கும் நிலையில், அவரைவிட்டு பிரிந்து பவித்ரா கவுடாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

பவித்ரா கவுடா பற்றி சமூக வலைதளத்தில் ரேணுகசாமி என்கிற இளைஞர் மோசமாக கமெண்ட் செய்தது மட்டுமில்லாமல், ஆபாசமான போட்டோக்களை அனுப்பி உள்ளார். இந்த நேரத்தில், ரேணுகசாமி காமாக்‌ஷிபாலயா என்ற இடத்தில் கடந்த ஜூன் 9ஆம் தேதி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து, போலீசார் ரேணுகா சுவாமி உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் நான்கு பேர் தானாக ஆஜராகி, பணத்திற்காக ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக கூறினர்.

ஆனால், ரேணுகாசாமி கொலை வழக்கில் போலீசாருக்கு சந்தேகம் இருந்ததை அடுத்து, போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியதில், கன்னட நடிகர் தர்ஷன், அவரது மனைவி பவித்ரா கவுடா உள்பட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், ரேணுகா சுவாமி கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிக்கை வெளியாகி உள்ளது. அதில்,ரேணுகா சுவாமி ஜூன் 8 கடத்தப்பட்ட போது, பவித்ரா அவரை காலணியால் மிதித்து துன்புறுத்தி உள்ளார். இதற்கு ஆதாரமாக பவித்ராவின் செருப்பில ரேணுகா சுவாமியின் ரத்தக்கரை படிந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், நக கருவியை பயன்படுத்தி, ரேணுகா சுவாமியின் ஆண் உறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி, விதைப்பைகளை அடித்து சிதைத்து, பல கொடுமைகளை செய்து ரேணுகா சுவாமியை கொலை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொடூரமான சம்பவம் அனைத்தும் நடிகை பவித்ராவின் கண்முன்னே நடந்துள்ளது.

மேலும் ரேணுகாசாமிக்கு ஒரு பக்கம் காதுகளும் வெட்டப்பட்டு இருந்ததாம்..

அவரது உடல் ஜூன் 9ஆம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு வாய்க்காலில் கண்டறியப்பட்ட நிலையில், அப்போது அவரது முகத்தை நாய்கள் கடித்துக் குதறி இருக்கிறது.

நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகரான ரேணுகா சுவாமி, பவித்ராவிற்கு தனது இன்ஸ்டாகிராமில் இருந்து பவித்ர கவுடா என்ற பெயரில் மெசேஜ் செய்ததும், அவரை உடலுறுவுக்கு வருமாறு அழைத்ததும், தொடர்ந்து ஆபாச புகைப்படத்தை அனுப்பியதே கொலைக்கு காரணம் என குற்றப்பத்திரிக்கையில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பவித்ரா தனது மேனேஜர் மூலம் ரேணுகா சுவாமியிடம் பெண் போல பேசி அவரது விவரத்தை கண்டுபிடித்து இந்த கொடூர கொலையை செய்து இருப்பதாக குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது.

கொலை இடம்பெற்ற தினம் இரவு 7 மணியளவில் அந்த இடத்திற்கு நடிகர் தர்ஷன் வருவதும்.. பிறகு விடியற்காலை 3 மணிக்கு அங்கிருந்து வெளியேறுவதும் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

அவரை கட்டி வைத்து உடலில் மின்சாரத்தையும் பாய்ச்சியதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலால் படுகாயமடைந்த அவர் உயிரிழந்த நிலையில், அதன் பிறகு நள்ளிரவில் அவரது உடலை வாய்க்காலில் வீசியுள்ளனர். மேலும், அவரை கடத்திய தர்ஷன் ரசிகர் மன்ற உறுப்பினர்களும் தங்கள் மொபைலை வீசிவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *