மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா… சோகத்தில் ரசிகர்கள்

மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா… சோகத்தில் ரசிகர்கள்
  • PublishedOctober 13, 2023

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தசை அழற்சி (மயோசிடிஸ்) நோயால் பாதிக்கப்பட்டு கடந்தாண்டு முதல் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.

மீண்டும் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காக சினிமாவில் நடிக்காமல் ஓய்வெடுக்க ஆரம்பித்தார். சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் சென்று வந்தார்.

கஷ்டத்திற்கு மத்தியிலும் சகுந்தலம், குஷி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

ஏற்கனவே ஆசையாய் காதலித்த நாக சைதன்யாவை திருமணம் செய்து 4 ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.

அதன்பின் மனதாலும் உடலாலும் பல கஷ்டபங்களை சந்தித்தும் வந்தார். தற்போது மயோசிடிஸ் நோயிற்கு சிகிச்சை பெற்று கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார்.

ஆனால் மீண்டும் சில உடல் பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்று சமந்தாவே இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

அதாவது வெள்ளை அணுக்கள் உற்பத்தியை அதிகரித்து உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக அந்த பதிவில் கூறியிருக்கிறார் நடிகை சமந்தா.

அதன்பின் பகிர்ந்த ஒரு வீடியோவில் தன்னுடைய செல்ல நாயுடன் விளையாடிக் கொண்டிருப்பதையும் பகிர்ந்துள்ளார்.

வெளிநாடு சென்று சிகிச்சை பெற உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி இருந்தன. ஆனால், தற்போது ஐதராபாத்திலேயே சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *