சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!

சிங்கத்தை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்!
  • PublishedJune 30, 2023

நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கம் ஒன்றை தத்தெடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது விடயம் குறித்து பூங்கா நிர்வாகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.குறித்த அறிக்கையின்படி ‘ஷேரு’ என்ற 3 வயது ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் 6 மாதங்களுக்கு தத்தெடுத்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் இந்த தத்தெடுப்பு கண்டிப்பாக ஷேரு சிங்கத்தின் பராமரிப்புக்கு பெரிதும் உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் இதே பூங்காவில் ஒரு பெண் யானையை முன்னர் தத்தெடுத்திருந்தார் என்பதும் விசேடம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *