சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு வருகின்றது “அயலான் ”

சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு வருகின்றது “அயலான் ”
  • PublishedSeptember 24, 2023

சுமார் 8 வருடங்களாக ரிலீசாகாமல் உள்ள சிவகார்த்திகேயனின் அயலான் படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது.

இதையொட்டி அவரது ரசிகர்களும் மிகுந்த விருப்பத்துடன் காத்திருந்தனர். சயின்ஸ் பிக்ஷனாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஏலியனை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது.

முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ள நிலையில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இந்தப் படம் தீபாவளி ரேசிலிருந்து பின்வாங்கியுள்ளது. மேலும் படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளதாக நேற்றைய தினம் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதனால் அவருடைய ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். முன்னதாக வெளியாகியுள்ள மாவீரன் படம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டிலேயே சிவகார்த்திகேயனின் அயலான் படமும் வெளியாகவுள்ளதாக வெளியான தகவல் அவர்களுக்கு உற்சாகத்தை அளித்திருந்தது.

இதனிடையே பொங்கல் பண்டிகையையொட்டி அயலான் படம் வெளியாகவுள்ள நிலையில், இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *