“நெஞ்சே பதறுகிறது…..” சூர்யா போட்ட எமோஷனல் டுவிட்

“நெஞ்சே பதறுகிறது…..” சூர்யா போட்ட எமோஷனல் டுவிட்
  • PublishedAugust 1, 2024

கேரளாவில் உள்ள வயநாட்டில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இதுவரை 270 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். வயநாடு நிலச்சரிவு சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியிருக்கிறது.

2வது நாளாக இன்றும் பல கிராமங்களில் மீட்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நடிகர்கள் விஜய், சியான் விக்ரம், குஷ்பு, ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பல கோலிவுட் பிரபலங்களும் வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், தற்போது நடிகர் சூர்யாவும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ட்வீட் போட்டு தெரிவித்துள்ளார்.

நெஞ்சே பதறுகிறது.. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட அத்தனை குடும்பங்களை நினைத்தும் வருந்துகிறேன். மக்களை காப்பாற்றும் பணியில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் வணங்குகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *